Thursday, August 9, 2012

Global Sourashtra Meet - 2012.

அகில உலக ஸௌராஷ்ட்ர மஹாநாடு, மதுரையில்  2012 ஆகஸ்ட் 4, மற்றும் 5 தேதிகளில் விரகனூர் ரிங் ரோடில் நடைபெற்றது.

ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களால் மஹாநாட்டிற்கு வர இயலவில்லை.

பெங்களூர் ஸ்ரீ எல்.ஸ்ரீ ஹரி கோடே அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  செல்வி ஜெயலலிதா அவர்களும் வரவில்லை.

31 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸௌராஷ்ட்ர மஹாநாட்டில்
பல ஊர்களிலுள்ள ஸௌராஷ்ட்ரர்கள் சுமார் 10000 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீ ஸ்ரீ ஹரி கோடே அவர்களுடன் திருவாளர்கள் சி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.ஸுப்ரமண்யன், டி.வி. குபேந்திரன், வி.கே. கிருஷ்ணமூர்த்தி, டி.ஜி.துவாரகாநாத், டி.ஆர். ஜயராமன் ஆகியோர் சந்தித்து
ஸௌராஷ்ட்ர மொழி வளர்ச்சி குறித்தும் ஸௌராஷ்ட்ரர் வரலாறு குறித்தும் பேசினர். மேற்கொண்டு, பெங்களூரில் ஸ்ரீ ஹரி கோடே அவர்களைச் சந்த்தித்து பேச உள்ளனர்.

ஸௌராஷ்ட்ர முன்னேற்ற கழகம் வெற்றிகரமாக ஸௌராஷ்ட்ர மஹாநாட்டை நடத்தி முடித்துள்ளனர்.

மேற்கொண்டு ஸௌராஷ்ட்ர முன்னேற்ற கழகம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.


Sourashtra Class Room